செய்திகள்
மத்தூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
மத்தூர் அருகே அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்துள்ளது என்ற வதந்தியை நம்பி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Pongal
கிருஷ்ணகிரி:
இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் ரேசன் கடையின் முன்பு திரண்டு நீண்ட வரிசையில் நின்றனர். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்துள்ளது என்று வதந்தியை நம்பி பொதுமக்கள் கிருஷ்ணகிரி-பெங்களூர் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிந்த கூட்டுறவு சங்க தலைவர் சக்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் பொதுமக்களுக்கு ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. #Pongal