செய்திகள்

காங்கயம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2019-01-07 12:02 GMT   |   Update On 2019-01-07 12:03 GMT
காங்கயம் அருகே பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம்:

கோவையை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 19). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது உறவினரை பார்க்க கோவையில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தார்.

திருப்பூர்- ஊத்துக்குளி ரோட்டில் உள்ள செங்கப்பள்ளி அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News