செய்திகள்

மதுரையில் சர்க்கஸ் பார்க்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-01-02 11:59 GMT   |   Update On 2019-01-02 11:59 GMT
சர்க்கஸ் பார்க்கச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்த முத்துராமன் மனைவி லதா (வயது 49). இவர் அய்யர்பங்களா பகுதியில் நடைபெற்ற சர்க்கஸ் பார்ப்பதற்காக சென்றார்.

பஸ்சில் இருந்து இறங்கி புதுநத்தம் ரோட்டில் நடந்து சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி லதா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இது குறித்து தல்லாகுளம் போலீசில், லதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், நகை பறித்ததாக கே.புதூர் குட்டை கார்த்திக், வண்டியூர் சேவுகப் பெருமாள், தெற்குவாசல் தினேஷ், ஆனையூர் பிரகாஷ், காரைக்குடி சூடாமணிபுரம் காளிமுத்து, வில்லாபுரம் மொட்டை செல்வம் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News