செய்திகள்

மெஞ்ஞானபுரம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2018-12-31 11:54 GMT   |   Update On 2018-12-31 11:54 GMT
மெஞ்ஞானபுரம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கீழராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 29). கூலித் தொழிலாளி. இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, முத்தரசி என்ற மனைவியும் 2 வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சிவலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதை மனைவி முத்தரசி கண்டித்தார்.

இந்த நிலையில் இரவு வீட்டுக்கு அருகில் சிவலிங்கம் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சிவலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News