செய்திகள்
கோவை அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
கோவை அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை காந்திபார்க் அருகே உள்ள சலீவன் வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது 61). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் இவர் தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். ராகவேந்திரா கோவில் அருகே சென்ற போது திடீரென சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மோகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.