செய்திகள்

திருவள்ளூரில் ஆடிட்டர் அலுவலகத்தில் பணம் கொள்ளை

Published On 2018-12-25 09:08 GMT   |   Update On 2018-12-25 09:08 GMT
திருவள்ளூரில் ஆடிட்டர் அலுவலகத்தில் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த், ஆடிட்டர். இவர் வருமானம் மற்றும் சொத்து வரி சம்பந்தமான ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். நேற்று இரவு மர்மநபர்கள் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பி விட்டனர்.

இதுகுறித்து விஜயகாந்த் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News