செய்திகள்

தோவாளை அருகே லாரி மீது மினி டெம்போ மோதல்- டிரைவர் பலி

Published On 2018-12-23 12:21 GMT   |   Update On 2018-12-23 12:21 GMT
தோவாளை அருகே பால் ஏற்றிச் சென்ற மினி டெம்போ ரோட்டில் நிறுத்திருந்த லாரி மீது மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் அழகப்ப புரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சுயம்புலிங்கம் (வயது 23). மினி டெம்போ டிரைவர்.

சுயம்புலிங்கம் மினி டெம்போவில் நேற்று இரவு ஆரல்வாய்மொழியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு வெள்ளமடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் ஆரல்வாய்மொழி தெற்கூரை சேர்ந்த குமார் (38) என்பவர் இருந்தார்.

மினி டெம்போ தோவாளை அருகே பண்டாரபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சுயம்புலிங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. அப்போது திடீரென ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது வேகமாக மோதியது.

இதில் மினி டெம்போவின் முன் பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அதில் இருந்த சுயம்புலிங்கம், குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். சுயம்புலிங்கத்திற்கு தலை மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுயம்புலிங்கம் பரிதாபமாக இறந்தார். குமார் படுகாயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பலியான சுயம்புலிங்கத் தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News