செய்திகள்

காரிமங்கலம் அருகே லாரி மீது மினி சரக்கு லாரி மோதல்- டிரைவர் பலி

Published On 2018-12-21 16:11 GMT   |   Update On 2018-12-21 16:11 GMT
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே இன்று அதிகாலை சாலையோரம் நின்று இருந்த லாரியின் மீது மினி சரக்கு லாரி மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
காரிமங்கலம்:

கேரளாவில் இருந்து பெங்களூர் நோக்கி மினி சரக்குலாரி வந்து கொண்டு இருந்தது. மினி சரக்கு லாரி இன்று அதிகாலை 3 மணி அளவில் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பைபாஸ் பிரிவு சாலை அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து எதிர்பாரவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் மினி சரக்குலாரியை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலே தலை நசுங்கி உயிரிழந்தார். 

விசாரணையில் இவர் கேரளா மாநிலம் கோட்டையம் பேரூர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் கிரிஷ் (34) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் கிரிஷ்ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News