செய்திகள்

அரசு பேருந்து மீது லாரி மோதல்- பயணிகள் உயிர்தப்பினர்

Published On 2018-12-20 14:53 GMT   |   Update On 2018-12-20 14:53 GMT
அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தருமபுரி:

தருமபுரியை அடுத்த பென்னாகரம் ரோடு, 4 வழிச்சாலை பாலத்தின் அடியில் ஒரு அரசு பேருந்து தருமபுரியில் இருந்து பென்னாகரத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றபோது பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து அதிகபாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி மேம்பாலத்தின் மேலே செல்லாமல் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் மீது மோதியது.

இதில் அரசு பேருந்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்டவில்லை. பேருந்தின் கண்ணாடி மட்டும் உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News