செய்திகள்

மதுரையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

Published On 2018-12-18 12:10 GMT   |   Update On 2018-12-18 12:10 GMT
மதுரையில் 5 கிலோ கஞ்சாவுடன் தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப் பாண்டி மற்றும் போலீசார் ஹார்விபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் 3 கிலோ 350 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதனையும், அவர்களி டம் இருந்த ரூ.13 ஆயிரத்து 80-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் அய்யனார் காலனியை சேர்ந்த மதுரைவீரன் (வயது55), அவனியாபுரம் மேலதெருவைச் சேர்ந்த தங்கபெருமாள் (65), இவரது மகன் முத்தையா (25) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன், யாகப்பா நகர் மீனாட்சி தெருவில் ரோந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நரிக்குட்டி என்ற சரவணனை (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¾ கிலோ கஞ்சாவும், ரூ1980-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News