செய்திகள்
சறுக்கி கீழே விழுந்த பெண் மீது லாரி ஏறியதில் தலைநசுங்கி பலி
போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சறுக்கி கீழே விழுந்த பெண் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுசூளாகரை கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ். இவரது மனைவி இளமதி(28).
இருவரும் போச்சம்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு பகுதியில் சாலை விரிவு செய்யும் பணி நடைபெற்று வந்திருந்தன. இதனால் அப்பகுதியில் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் சறுக்கியது. இதில் புஷ்பராஜ் நிலை தடுமாறி தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால், அமர்ந்திருந்த இளமதி இருசக்கர வாகனத்தை தொடர்ந்து வந்துகொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பியோடிவிட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து நடந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் கூறியதாவது-
தற்போது சாலை விரிவுபடுத்தும் பனி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவுபடுத்தும் பணியானது கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும். ஆனால், சாலை அமைக்க இரு புறங்களிலும் தோன்டப்பட்ட பள்ளம் இதுனால் வரையில் அதனை சரிசெய்யும் வேலையினை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும். கடந்த ஆறு மாத காலமாக பணிகளை மெத்தனமாக செய்யும் காரணத்தால் அடிக்கடி சிறு, சிறு விபத்து நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்.
இந்த இறப்பிற்கு காரணம் சம்மந்தபட்ட அதிகாரிகளே என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். #tamilnews
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுசூளாகரை கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ். இவரது மனைவி இளமதி(28).
இருவரும் போச்சம்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு பகுதியில் சாலை விரிவு செய்யும் பணி நடைபெற்று வந்திருந்தன. இதனால் அப்பகுதியில் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் சறுக்கியது. இதில் புஷ்பராஜ் நிலை தடுமாறி தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால், அமர்ந்திருந்த இளமதி இருசக்கர வாகனத்தை தொடர்ந்து வந்துகொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பியோடிவிட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து நடந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் கூறியதாவது-
தற்போது சாலை விரிவுபடுத்தும் பனி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவுபடுத்தும் பணியானது கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும். ஆனால், சாலை அமைக்க இரு புறங்களிலும் தோன்டப்பட்ட பள்ளம் இதுனால் வரையில் அதனை சரிசெய்யும் வேலையினை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும். கடந்த ஆறு மாத காலமாக பணிகளை மெத்தனமாக செய்யும் காரணத்தால் அடிக்கடி சிறு, சிறு விபத்து நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்.
இந்த இறப்பிற்கு காரணம் சம்மந்தபட்ட அதிகாரிகளே என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். #tamilnews