செய்திகள்
பெண் சடலம் எரிப்பு- 4 பேர் மீது வழக்குப்பதிவு
கம்பைநல்லூர் அருகே போலீசாருக்கு தெரியாமல் பெண்ணின் சடலத்தை எரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கம்பைநல்லூர்:
தருமபுரி மாவட்டம், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிரத்தினம். மனைவி கஸ்தூரி (27). இந்த தம்பதியருக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தைக்கு இருதயநோய் பாதிப்பு உள்ளதாம். இதனால் மனமுடைந்த கஸ்தூரி, நவம்பர் 29-ந் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
இதையடுத்து, தற்கொலை செய்துகொண்ட கஸ்தூரியின் சடலத்தை அவரது உறவினர்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் எரித்து விட்டனராம்.
இது குறித்து வகுரப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் மகன் மாரிமுத்து (34), சின்னசாமி என்பவரது மகன் கோவிந்தராஜ் (31), மாரியப்பன் என்பவரது மகன் சத்தியமூர்த்தி (30), காளியப்பன் என்பவரது மகன் மாரியப்பன் (68) ஆகியோர் மீது கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #tamilnews
தருமபுரி மாவட்டம், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிரத்தினம். மனைவி கஸ்தூரி (27). இந்த தம்பதியருக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தைக்கு இருதயநோய் பாதிப்பு உள்ளதாம். இதனால் மனமுடைந்த கஸ்தூரி, நவம்பர் 29-ந் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
இதையடுத்து, தற்கொலை செய்துகொண்ட கஸ்தூரியின் சடலத்தை அவரது உறவினர்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் எரித்து விட்டனராம்.
இது குறித்து வகுரப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் மகன் மாரிமுத்து (34), சின்னசாமி என்பவரது மகன் கோவிந்தராஜ் (31), மாரியப்பன் என்பவரது மகன் சத்தியமூர்த்தி (30), காளியப்பன் என்பவரது மகன் மாரியப்பன் (68) ஆகியோர் மீது கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #tamilnews