செய்திகள்

மகன் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-12-10 17:42 GMT   |   Update On 2018-12-10 17:42 GMT
மகன் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை உசிலம்பட்டி அருகேயுள்ள பூச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் ரஞ்சித்குமார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரஞ்சித்குமார், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதையடுத்து மாயாண்டி, தனது மகனிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்தார். ஆனாலும் ரஞ்சித்குமார் குடிப்பழக்கத்தை நிறுத்த வில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாயாண்டி சம்பவத்தன்று மாலையில் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாயாண்டி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக ஜெயலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News