செய்திகள்
இண்டூர் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி
இண்டூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இண்டூர்:
தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்றிரவு கலனி காட்டூர் கிராமத்தில் கொள்ளையர்கள் ஒரு வீட்டின் பூட்டை உடைக்க முயன்றனர்.
அதனை பார்த்த ஒருவர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் எழுந்து ஓடி வந்து கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.