செய்திகள்
பேருந்து-பைக் மோதல்: திருச்சியை சேர்ந்தவர் பலி
பெரம்பலூரில் தனியார் பேருந்து-பைக் மோதிய விபத்தில் திருச்சியை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மங்களமேடு அருகே கீழ பெரம்பலூர் சாலையில் இன்று காலை தனியார் பஸ் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு, இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த நபர் திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (45) என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.