செய்திகள்
அவினாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஒருவர் பலி
அவினாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
அவினாசி அருகே உள்ள ராயம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (59). இவரது மகன் மகேஸ்வரன். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். வடுகம் பாளையம் -அவினாசி சாலையில் நடுவச்சேரி பகுதியில் சென்ற போது ஆடு குறுக்கே வந்தது.
இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற மகேஸ்வரன் திடீர் பிரேக் போட்டார். அப்போது பின்னால் அமர்ந்து இருந்த செல்வராஜ் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் செல்வராஜ் இறந்தார். இது குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.