செய்திகள்

தூத்துக்குடியில் கைதி மர்ம மரணம்

Published On 2018-12-03 14:51 GMT   |   Update On 2018-12-03 14:51 GMT
தூத்துக்குடியில் கைதி மர்மமான முறையில் இறந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி:

மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது42). இவரை கஞ்சா பதுக்கி வைத்து விற்றதாக மெஞ்ஞானபுரம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைந்தனர்.

சிறையில் இருந்த பரமசிவத்துக்கு திடீர் என்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பரமசிவம் பரிதாபமாக இறந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. 

இதுபற்றி தட்டப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவம் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News