செய்திகள்
சங்கரன்கோவில் அருகே லாரி மோதி வாலிபர் பலி
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் கனபாரத் ராம் (வயது29), கூலித்தொழிலாளி.
இவர் கரிவலம் வந்தநல்லூர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டார். பின்னர் சாலையில் திரும்பினார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.
இதில் கனபாரத் ராம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கரிவலம்வந்த நல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த சுரண்டையை சேர்ந்த பால முருகன் என்பவரை கைது செய்தனர்.
பலியான கனபாரத் ராமுக்கு கடந்த மாதம் தான் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.