செய்திகள்

திருமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு துப்புரவு தொழிலாளி பலி

Published On 2018-11-30 11:37 GMT   |   Update On 2018-11-30 11:37 GMT
திருமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு துப்புரவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பேரையூர்:

திருமங்கலத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). திருமங்கலம் நகராட்சியில் கடந்த 20 ஆண்டாக துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணன் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

உடனடியாக அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணன் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. கடந்த 10 மாதத்தில் திருமங்கலம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

Tags:    

Similar News