செய்திகள்
பல்லடம் அருகே காற்றாலையில் தீ விபத்து
பல்லடம் அருகே காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் வந்து தீயை அணைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை நிறுவனம் இயங்கி வருகிறது. சுமார் 12 காற்றாலைகள் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் மாலை சுமார் 4 மணியளவில் ஒரு காற்றாலையில் இருந்து கரும் புகை வந்தது. லேசாக வந்த புகை திடீரென தீயாக மாறியது காற்றாலையின் பின் புறம் உள்ள விசிறிகளின் கட்டுப்பாட்டு மைய பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அங்கிருந்த காற்றாலை நிறுவன ஊழியர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு நிலையம் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவயிடம் வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர் ஆனால் இதற்குள் அந்த காற்றாலை பாதிக்கு மேல் தீயில் எரிந்து நாசமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்