search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்புதுறை"

    • வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
    • தலையில் ஏற்படும் காயங்களுக்கு கட்டு போடுவது குறித்து செயல் வழி விளக்கம் செய்து காட்டினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வடகிழக்கு பருவ மழை பேரிடர் கால முன்னெச்சரிக்கை தீ பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மாதிரி குறித்து ஒத்திகை பயிற்சி நடந்தது.

    தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா ராணி தலைமையில் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

    பருவமழை காலங்களில் பொதுமக்களை காப்பாற்ற வும், வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் பொழுது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன இயந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு. வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள், உயர் மாடி கட்டடங்களில் மாடிப்படி வழியாக வரமுடியாத சமயத்தில் கயிறு மற்றும் தார்பாலின் மூலமாக மீட்பது, கூட்ட நெரிசலில் விழுந்தால் தற்காத்துக் கொள்வது, ஆடைகள் தீப்பற்றி கொண்டால் தற்காத்து கொள்வது தலை மற்றும் கைகால் பகுதிகளில் ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு கட்டு போடுவது என்ற செயல் வழி விளக்கம் செய்து தீயணைப்பு வீரர்கள் மூலமாக செயல் விளக்கங்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

    ×