செய்திகள்

கோவில்பட்டியில் தொழில் அதிபருக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

Published On 2018-11-29 12:59 GMT   |   Update On 2018-11-29 12:59 GMT
கோவில்பட்டியில் தொழில் அதிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 44). இவர் மந்தித்தோப்பு ரோட்டில் தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் தனது நிறுவனத்தில் இருந்தார். அவருடன் காவலாளி பாலசுப்பிரமணியன்(45) என்பவரும் உடனிருந்தார்.

அப்போது கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெருவை சேர்ந்த முருகன் மகன் சூர்யா(19) என்பவர் திடீரென நிறுவனத்துக்குள் புகுந்து, மாரியப்பனை அரிவாளால் தாக்கினார்.  அப்போது அவரும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இதில் மாரியப்பன், சூர்யா, பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இது குறித்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பாரதிநகரை சேர்ந்த டிரைவர் காளிமுத்து (19), கிளவிபட்டி செண்பகராஜ் (33) இருவரையும் இன்று  போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News