செய்திகள்
பல்லடம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வினோபா நகரை சேர்ந்தவர் பிரேம்ஜி(வயது 20). இவர் காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று எனக்கு கல்லூரிக்கு செல்ல பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறினார். அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த பிரேம்ஜி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.