செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

Published On 2018-11-23 05:05 GMT   |   Update On 2018-11-23 05:05 GMT
நேற்று 101.65 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.89 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 5 ஆயிரத்து 81 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 643 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 500 கன அடியும் கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 200 கன அடியாக குறைக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 101.65 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.89 அடியாக உயர்ந்தது. பிற்பகலில் 102 அடியை எட்டியது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam
Tags:    

Similar News