செய்திகள்

கோவையில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-11-22 10:22 GMT   |   Update On 2018-11-22 10:22 GMT
கோவையில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூலூர்:

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 31). இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கவுதம் அங்குள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது பத்மாவதி (21) என்ற பெண்ணுக்கும் கவுதமுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த தகவல் இருவரது வீட்டுக்கும் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் விரக்தியடைந்த கள்ளக்காதல்ஜோடி நேற்று வேடசாமி கோவில் அருகே வி‌ஷம் குடித்தனர். மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு கவுதம் சிகிச்சை பலனின்றி இறந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் இன்று காலை பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் சூலூர் அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 41). இவரது மனைவி பத்மாவதி (35).

நேற்று தேவராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இரவு வீடு திரும்பியபோது பத்மாவதியை காணவில்லை. மனைவியை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார்.

இன்று காலை சூலூர் குளத்தில் இளம்பெண் பிணம் மிதப்பது குறித்து தகவல் கிடைத்ததும் தேவராஜ் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடப்பது தனது மனைவி பத்மாவதி என்பதை உறுதி செய்தார்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News