செய்திகள்

பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் மரக்கிளையை வெட்டிய தொழிலாளி கீழே விழுந்து பலி

Published On 2018-11-20 06:48 GMT   |   Update On 2018-11-20 06:48 GMT
பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் மரக்கிளையை வெட்டிய தொழிலாளி கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த துர்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மரக் கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி அறிந்ததும் சுப்பிரமணியின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் பொன்னேரி- செங்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி நிர்வாகம் உரிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பணியாளர்களை வேலை வாங்கி வருவதால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.

இதனிடையே பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அவ்வழியே வந்தார்.

அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News