செய்திகள்

மதுரையில் கார் விபத்து - கணினி நிறுவன ஊழியர் பலி

Published On 2018-11-19 10:01 GMT   |   Update On 2018-11-19 10:01 GMT
மதுரையில் கார் விபத்தில் கணினி நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பேரையூர்:

சென்னை முகப்பேர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கணபதிகவுசிக் (36). கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் காரில் மதுரை வந்தார்.

தல்லாகுளம் கோகலே ரோட்டில் கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணபதி கவுசிக்கை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News