அவனியாபுரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
அவனியாபுரம்:
மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது30). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன.
முத்துப்பாண்டி அடிக்கடி மது அருந்தியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பாண்டிச்செல்வி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அவரை சமரசம் செய்து வீட்டுக்கு வரும்படி முத்துப் பாண்டி அழைத்தார். ஆனால் பாண்டிச்செல்வி வர மறுத்து விட்டாராம்.
இதனால் மனவேதனை அடைந்து முத்துப்பாண்டி அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். பின்னர் சின்ன அனுப்பானடி சிந்தா மணி தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் மணிராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.