செய்திகள்

கடை வைக்க பெற்றோர் பணம் கொடுக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2018-11-17 18:13 GMT   |   Update On 2018-11-17 18:13 GMT
கடை வைக்க பெற்றோர் பணம் கொடுக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்:

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் ராஜா மணிகண்டன் (வயது 19). இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் தங்கி மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கடை வைத்து தொழில் செய்ய ராஜா மணிகண்டன் ஆசைப்பட்டுள்ளார்.

இதற்காக அவருடைய பெற்றோரிடம் அவர் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜாமணிகண்டன் அவர் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News