செய்திகள்

இந்திய கம்யூ. கட்சியினர் 7 பேர் நீக்கம்- முத்தரசன் அறிவிப்பு

Published On 2018-11-16 09:19 GMT   |   Update On 2018-11-16 09:19 GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 7 பேரை அடிப்படை பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக முத்தரசன் அறிவித்துள்ளார். #Mutharasan
சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்தும், கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தி வந்த வடலூர் கலியமூர்த்தி, கோடங்குடி கிளையைச் சேர்ந்த சுப்பிரமணியன், அம்பிகா, நிதிநத்தம் உலக நாதன், வதிட்டபுரம் முருகையன், தொளார் நாராயண சாமி, ராமச்சந்திரன் (காட்டு மன்னார்கோவில்) ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட நபர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்தவிதமான அரசியல், அமைப்புநிலை உறவுமில்லை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #CPI #Mutharasan
Tags:    

Similar News