செய்திகள்
பரமக்குடி அருகே மணல் திருட்டு - லாரி பறிமுதல்
பரமக்குடி அருகே அனுமதியின்றி மணலை திருடிச் சென்றது தொடர்பாக லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரமக்குடி:
பரமக்குடி அருகே பார்த்திபனூர்-நரிக்குடி விலக்கு ரோட்டில் பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி உரிமையாளர் மோசுகுடி கிராமத்தை சேர்ந்த பாண்டி(வயது 36), சிவகங்கை மாவட்டம் கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பரமக்குடி அருகே பார்த்திபனூர்-நரிக்குடி விலக்கு ரோட்டில் பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி உரிமையாளர் மோசுகுடி கிராமத்தை சேர்ந்த பாண்டி(வயது 36), சிவகங்கை மாவட்டம் கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.