செய்திகள்

திண்டிவனம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 மாத பெண் குழந்தை பலி

Published On 2018-11-11 16:38 GMT   |   Update On 2018-11-11 16:38 GMT
திண்டிவனம் அருகே மர்ம காய்ச்சலால் 10 நாட்களாக அவதிப்பட்டு வந்த 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வடக்கொளப்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் எழிலரசன். கூலி தொழிலாளி.

இவருக்கு 8 மாதத்தில் யுவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. அந்த குழந்தை கடந்த 10 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிபட்டது.

இதைத்தொடர்ந்து குழந்தை யுவஸ்ரீயை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை யுவஸ்ரீ திடீரென்று பரிதாபமாக இறந்தாள்.

இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News