செய்திகள்
திருவண்ணாமலை அருகே வீடு புகுந்து பெண்ணை மானபங்கப்படுத்திய வாலிபர் கைது
திருவண்ணாமலை அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி மானபங்கப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.
இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (19).மற்றும் தேனிமலை பகுதியை சேர்ந்த சேகர் (35). இருவரும் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தனர்.
தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை நிர்வாணபடுத்தி பாலியல் தொல்லை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து இந்த இளம்பெண் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அஜித்தை கைது செய்து தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.