செய்திகள்

சிவகிரியில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி மாணவர் பலி

Published On 2018-11-03 10:24 GMT   |   Update On 2018-11-03 10:24 GMT
சிவகிரியில் கல்லூரிக்கு சென்ற மாணவர் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி:

புளியங்குடி ஜின்னா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முபாரக். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் முகமது முஸ்தபா (வயது18). இவர் வாசுதேவநல்லூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

முகமது முஸ்தபா இன்று கல்லூரிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே சேலத்தில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த முகமது முஸ்தபா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான முகமது முஸ்தபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்கு சென்ற மாணவர் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News