செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே வேன் மோதி டிராக்டர் மெக்கானிக் பலி

Published On 2018-10-31 17:19 GMT   |   Update On 2018-10-31 17:19 GMT
நாமகிரிப்பேட்டை அருகே வேனும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் டிராக்டர் மெக்கானிக் பலியானார்.
நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள உரிபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 44). டிராக்டர் மெக்கானிக். இவர் தம்மம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக மெட்டாலா நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மெட்டாலாவில் இருந்து முள்ளுக்குறிச்சி நோக்கி சென்ற ஒரு வேனும், இவரது மோட்டார் சைக்கிளும் உடையார்பாளையம் என்ற இடத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்தில் வேனை ஓட்டிவந்த முள்ளுக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் நடராஜ் (66) என்பவரும் பலத்த காயம் அடைந்து, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News