செய்திகள்
ஊத்துக்குளி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
ஊத்துக்குளி அருகே இரு சக்கரவாகனம் சாலையில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஊத்துக்குளி:
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை தீர்த்தகிரி ரோடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் சதீஷ் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று வேலை சம்பந்தமாக திருப்பூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு சென்று விட்டு மீண்டும் மாலை திருப்பூர் செல்வதற்காக ஊத்துக்குளி அருகே விஜயமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தார். மேட்டுக்கடை கருப்பராயன் கோயில் அருகில் வந்த போது இவரது இரு சக்கரவாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலையில் பலத்த அடிபட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து ஊத்துக்குளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை தீர்த்தகிரி ரோடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் சதீஷ் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று வேலை சம்பந்தமாக திருப்பூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு சென்று விட்டு மீண்டும் மாலை திருப்பூர் செல்வதற்காக ஊத்துக்குளி அருகே விஜயமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தார். மேட்டுக்கடை கருப்பராயன் கோயில் அருகில் வந்த போது இவரது இரு சக்கரவாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலையில் பலத்த அடிபட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து ஊத்துக்குளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.