செய்திகள்

திருவள்ளூர் அருகே வீட்டுவாசலில் விளக்கு ஏற்றிய பெண் உடல் கருகி பலி

Published On 2018-10-31 06:23 GMT   |   Update On 2018-10-31 06:23 GMT
திருவள்ளூர் அருகே வீட்டுவாசலில் விளக்கு ஏற்றிய பெண் உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 42). நேற்று மாலை அவர் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றினார்.

அப்போது அவரது உடையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர் அலறி கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் சசிகலாவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சசிகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

Tags:    

Similar News