செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் பலி

Published On 2018-10-29 14:26 GMT   |   Update On 2018-10-29 14:26 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிராக்டர் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மஜீத் தெருவை சேர்ந்தவர் குத்புதீன் (வயது 65). இவர் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்று உள்ளார். 

குத்புதீன் நேற்று மாலை மாயா பஜார் தெருவிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக அவரது பின்னாடி வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த குத்புதீன் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் குத்புதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து குத்புதீன் சகோதரர் நசுருதீன் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News