செய்திகள்
புதுவை அருகே காவலாளி தூக்குபோட்டு தற்கொலை
மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் சரவணன் நகர் கொண்டாரெட்டி தெருவை சேர்ந்தவர் தாஜன் (வயது52). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
மதுகுடிக்கும் பழக்கம் உள்ள தாஜன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் கேட்டு மதுகுடித்து வந்தார். அதுபோல் தாஜன் நேற்றும் வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால் லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த தாஜன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.