செய்திகள்
தமிழகத்தில் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்கள் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalanisamy #ADMK
சென்னை:
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம் மற்றும் சீமாங்க் மைய அறுவை அரங்கம் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம்; கடலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக் கட்டிடம்; காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 60 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக் கட்டிடம்; கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நலப்பிரிவுக் கட்டிடம் ஆகியவற்றையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டிடம்; பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம் உலுப்பகுடி, சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் ஆகிய மூன்று மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்;
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி, நாமக்கல் மாவட்டம் செவிந்திப்பட்டி, விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் மற்றும் தேனி மாவட்டம் குமணன்தொழு ஆகிய நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், என மொத்தம் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம் மற்றும் சீமாங்க் மைய அறுவை அரங்கம் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம்; கடலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக் கட்டிடம்; காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 60 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக் கட்டிடம்; கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நலப்பிரிவுக் கட்டிடம் ஆகியவற்றையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டிடம்; பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம் உலுப்பகுடி, சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் ஆகிய மூன்று மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்;
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி, நாமக்கல் மாவட்டம் செவிந்திப்பட்டி, விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் மற்றும் தேனி மாவட்டம் குமணன்தொழு ஆகிய நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், என மொத்தம் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.