செய்திகள்

மாரண்டஅள்ளி அருகே மீன் வியாபாரி மனைவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-10-25 14:15 GMT   |   Update On 2018-10-25 14:15 GMT
மாரண்டஅள்ளி அருகே குடும்ப தகராறில் மீன் வியாபாரி மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்துள்ள 5 வது மயில் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வேலம்மாள் (வயது50). 

சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேலம்மாள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வேலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News