செய்திகள்
அருமனை அருகே தீயில் கருகிய இளம்பெண் பலி- போலீசார் விசாரணை
அருமனை அருகே தீயில் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
அருமனையை அடுத்த சிதறால் பகுதியை சேர்ந்தவர் கிரீஸ்குமார்.
இவரது மனைவி ரம்யா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 15-ந் தேதி மின்சார தடை காரணமாக வீட்டில் விளக்குகள் எரியவில்லை.
எனவே ரம்யா, வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்தார். அப்போது விளக்கு சரிந்து விழுந்து ரம்யா உடலில் தீப்பிடித்தது.
வலி தாங்க முடியாமல் ரம்யா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ரம்யாவை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த ரம்யா, நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபாமாக இறந்து போனார்.
இது பற்றி ரம்யாவின் தாயார் அருமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அருமனையை அடுத்த சிதறால் பகுதியை சேர்ந்தவர் கிரீஸ்குமார்.
இவரது மனைவி ரம்யா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 15-ந் தேதி மின்சார தடை காரணமாக வீட்டில் விளக்குகள் எரியவில்லை.
எனவே ரம்யா, வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்தார். அப்போது விளக்கு சரிந்து விழுந்து ரம்யா உடலில் தீப்பிடித்தது.
வலி தாங்க முடியாமல் ரம்யா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ரம்யாவை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த ரம்யா, நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபாமாக இறந்து போனார்.
இது பற்றி ரம்யாவின் தாயார் அருமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.