மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரமாக செயல்பட்டு குற்ற வழக்குகளை நேர்மையோடு விசாரித்து வந்து நீதியை நிலைநாட்டிய சி.பி.ஐ. துறையை அரசின் சுயலாபத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
தங்களின் கைப்பாவையாக மாற்றி ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆணைப்படி புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும், புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார்.