செய்திகள்

ஆர்.எஸ்.புரத்தில் அரசு ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது

Published On 2018-10-22 12:08 GMT   |   Update On 2018-10-22 12:08 GMT
ஆர்.எஸ்.புரத்தில் அரசு ஊழியர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

ஆர்.எஸ்.புரம் பாசியகா ரலு தெருவை சேர்ந்தவர் ஆரவாழி(வயது 52). மத்திய கலால் துறையில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தம்பன் என்ற அய்யாசாமி(32) என்பவரை கைது செய்தனர்.

கோவை ஆவாரம்பாளை யத்தை சேர்ந்தவர் ரவிகுமார் (60). சம்பவத்தன்று இவர் குடும்பத்தினருடன் குருவாயூர் சென்றிருந்தார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த 20 கிப்ட் வாட்சுகள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிரகாசம்(36). சம்பவத்தன்று இவர் குடும்பத்தினருடன் மதுரை சென்றார். நேற்று வீடு திரும்பிய போது முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து திருட முயன்றது தெரிய வந்தது.இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News