தேனி:
தேனி அருகே கோடாங்கிபட்டி போடி மெயின்ரோடு பகுதியில் தனியார் மசாலா கம்பெனி உள்ளது. இங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 12 சீரக மூட்டைகளை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.
இது குறித்து அதன் மேலாளர் ஜெகதீசன் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவர் கம்பம் மெயின்ரோட்டில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை மூடிச் சென்றார். மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் முத்தையாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது 31 அரிசி மூட்டைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.