செய்திகள்

வலங்கைமானில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள் திருட்டு

Published On 2018-10-20 16:53 GMT   |   Update On 2018-10-20 16:53 GMT
வலங்கைமானில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கீழத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). இவருடைய மனைவி மங்கையர்கரசி. சம்பவத்தன்று இளங்கோவன் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மங்கையர்கரசி வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சாவூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் தனிப்படை போலீசார் 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News