செய்திகள்

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து பலி

Published On 2018-10-20 10:18 GMT   |   Update On 2018-10-20 10:18 GMT
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

மதுரை ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). இவர் நேற்று திருமங்கலம் அருகே கிழவனேரியில் நடந்த உறவினர் விசே‌ஷத்திற்கு சகோதரி மகன் தங்கப் பாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் அவர்கள் மாலையில் மதுரைக்கு புறப்பட்டனர். மறவமங்கலம் மேம்பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் வேகமாக இறங்கியது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த மஞ்சுளா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானதால் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News