செய்திகள்
சூலூரில் குளத்தில் பிணமாக மிதந்த இளம்பெண் கொலையா? - போலீசார் விசாரணை
சூலூர் பெரியகுளத்தில் இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். அவரை யாராவது கொலை செய்து வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர்:
சூலூர் பெரியகுளத்தில் சுடிதார் அணிந்த நிலையில் ஒரு இளம்பெண் நேற்று மாலை பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த சிலர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் மீனவர்கள் உதவியுடன் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
விசாரணையில் பிணமாக கிடந்த பெண் யார் என்று தெரியவில்லை. மேலும் அவர் தனது கையில் ஒரு பேக் வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டபோது அதில் ஏதும் இல்லை. இதனால் பிணமாக கிடந்த பெண் பற்றி துப்பு ஏதும் கிடைக்கவில்லை. எனவே இளம்பெண்ணை கொன்று யாராவது குளத்தில் வீசி சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிணமாக கிடந்த பெண்ணின் அடையாளத்தை காண கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு இளம்பெண் யாராவது காணாமல் போய் இருப்பதாக புகார் ஏதும் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த பெண் யார் என்று தெரிந்தால் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியும் என்பதால் போலீசார் இளம்பெண்ணின் அடையாளத்தை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். குளத்தில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
சூலூர் பெரியகுளத்தில் சுடிதார் அணிந்த நிலையில் ஒரு இளம்பெண் நேற்று மாலை பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த சிலர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் மீனவர்கள் உதவியுடன் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
விசாரணையில் பிணமாக கிடந்த பெண் யார் என்று தெரியவில்லை. மேலும் அவர் தனது கையில் ஒரு பேக் வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டபோது அதில் ஏதும் இல்லை. இதனால் பிணமாக கிடந்த பெண் பற்றி துப்பு ஏதும் கிடைக்கவில்லை. எனவே இளம்பெண்ணை கொன்று யாராவது குளத்தில் வீசி சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிணமாக கிடந்த பெண்ணின் அடையாளத்தை காண கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு இளம்பெண் யாராவது காணாமல் போய் இருப்பதாக புகார் ஏதும் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த பெண் யார் என்று தெரிந்தால் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியும் என்பதால் போலீசார் இளம்பெண்ணின் அடையாளத்தை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். குளத்தில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.