செய்திகள்

முருங்கப்பாக்கத்தில் கார் மோதி டிரைவர் பலி

Published On 2018-10-15 12:39 GMT   |   Update On 2018-10-15 12:39 GMT
முருங்கப்பாக்கத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் பலியானார்.

புதுச்சேரி:

முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது50), கார் டிரைவர். இவருடைய மனைவி சிவசங்கரி (வயது45). இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்களில் அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

செல்லும் வழியில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் கதிரேசன் மனைவி சிவசங்கரி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் கதிரேசனை மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கதிரேசன் பரிதாபமாக இறந்து போனார். மனைவி சிவசங்கரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக், ஏட்டு புவனேஷ் அகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News