செய்திகள்

திருச்சியில் விமான நிலைய சுற்றுச்சுவர் மீது ஏர் இந்தியா விமானம் மோதியது - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

Published On 2018-10-12 00:58 GMT   |   Update On 2018-10-12 08:50 GMT
திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதிவிட்டு தொடர்ந்து பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. #AirIndia
திருச்சி :

திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவரில் மோதிவிட்டு தொடர்ந்து பறந்தது. 

மேலும், சுவருடன் சேர்ந்து அருகே இருந்த ஐஎல்எஸ் ஆண்டனா மீதும் உரசி சென்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஐஎல்எஸ் ஆண்டனாவும் நொறுங்கியது. 

இந்த எதிர்பாரா விபத்து காரணமாக விமானத்தில் லேசான அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் தொடர்ந்து பறந்த விமானம், பின்னர் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

இதனால் விமானத்தில் பயணித்த 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. #AirIndia 
Tags:    

Similar News